தேசிய செய்திகள்

அயோத்தி நில ஊழல் பற்றிய விசாரணை தொடங்கியது

அயோத்தி நில ஊழல் பற்றிய விசாரணை தொடங்கியுள்ளது.

தினத்தந்தி

லக்னோ,

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் இடத்தை சுற்றி 5 கி.மீ. சுற்றளவுக்குள் எஸ்.சி. சமூகத்தினரின் நிலங்களை ஒரு அறக்கட்டளை நிர்வாகம் வாங்கி இருந்தது. ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து, அந்த அறக்கட்டளையிடம் இருந்து அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும், அவர்களின் உறவினர்களும் நிலங்களை அடிமாட்டு வாங்கியதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.

இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். சிறப்பு செயலாளர் (வருவாய்) ராதேஷ்யாம் மிஸ்ரா, விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில், மாநில அரசு இந்த விசாரணையை தொடங்கி விட்டதாக கூடுதல் தலைமை செயலாளர் மனோஜ்குமார் சிங் நேற்று தெரிவித்தார். விசாரணை முடிவுகள், முதல்-மந்திரியிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை