போர்ட் பிளேர்,
அந்தமான் நிகோபார் தீவுகளில் கடந்த 24 மணி நேரத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,570- ஆக உயர்ந்துள்ளது. இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட 3 பேரில் இரண்டுபேருக்கு விமான நிலைய பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்டது.
அந்தமானுக்கு வரும் பயணிகள் விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம் ஆகும். அந்தமான் நிகோபாரில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. வடக்கு மற்றும் மத்திய அந்தமான் நிகோபாரில் தொற்று பாதிப்பு தற்போது இல்லை. தெற்கு அந்தமானில் மட்டுமே தொற்று பாதிப்பு உள்ளது.