கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

ஆந்திராவின் ஆட்சி, நிர்வாகத்தின் மையமாகும் விசாகப்பட்டினம் - அமைச்சரவையில் முடிவு

ஆந்திரப் பிரதேசத்தின் ஆட்சி மற்றும் நிர்வாகத்தின் மையமாக விசாகப்பட்டினம் மாற்றப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

அமராவதி,

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் அமராவதியில் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முதல்-மந்திரி அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தசரா விழாக்கள் தொடங்கும் நேரத்தில் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்படும் என்றும் விசாகப்பட்டினம் ஆட்சி மற்றும் நிர்வாகத்தின் மையமாக மாற்றப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில், முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, விஜயதசமிக்குள் விசாகப்பட்டினத்தில் இருந்து நிர்வாகத்தைத் தொடங்குவோம் என்றும், விசாகப்பட்டினத்தில் அலுவலகங்களைத் தேர்ந்தெடுக்க ஒரு குழுவை நியமிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்