தேசிய செய்திகள்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் மற்றொரு மாணவர் மாயம்

டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் பல்கலை கழக வளாகத்தில் இருந்து காணாமல் போயுள்ளார்.#JawaharlalNehruUniversity #student

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் வாழ்க்கை அறிவியலுக்கான முனைவர் பட்டப்படிப்பு படித்து வந்தவர் முகுல் ஜெயின் (வயது 26). இந்த நிலையில், கடந்த 8ந்தேதி மாலையில் இருந்து அவர் காணாமல் போயுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 15ந்தேதி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் படித்து வந்த நஜீப் அகமது என்ற மாணவர் மஹி மாண்டவி பகுதியில் அமைந்த பல்கலை கழக விடுதியில் இருந்து காணாமல் போயுள்ளார். உயிரிதொழில்நுட்பத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்த அவர் மற்ற மாணவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினை தொடர்ந்து காணாமல் போனது தெரிய வந்தது.

இந்த சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு பின் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நஜீப்பின் தாயார் தனது மகனை கண்டுபிடித்து தரும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த வருடம் மே 16ந்தேதி இந்த வழக்கினை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது.

#JawaharlalNehruUniversity | #student

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை