தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம் : மேலும் ஒரு பெண் சடலம் எரிந்த நிலையில் மீட்பு

தெலுங்கானாவில் சம்ஷாபாத் பகுதியில் மற்றொரு பெண்ணின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஐதாராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாவட்டம் சம்ஷாபாத் பகுதியில் கால்நடை மருத்துவரான 26 வயது இளம்பெண், பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த அதிர்ச்சி சம்பவத்தின் சுவடுகள் மறைவதற்குள், பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் மற்றொரு பெண்ணின் உடலும் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த இரண்டு கொலைகளுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...