தேசிய செய்திகள்

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

குடியரசு தின விழாவின் நிறைவாக முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

புதுடெல்லி,

நாட்டின் 77-வது குடியரசு தின விழா ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்பட்டது. 76-வது குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றினார். பின்னர் 21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

குடியரசு தின கொண்டாட்டங்கள் டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதை (கடமை பாதை) பகுதியில் நடைபெற்றது. குடியரசு தின விழாவில் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் ஆண்டோனியோ லுயிஸ் சாண்டோஸ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிலையில், குடியரசு தின விழாவின் நிறைவாக முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. குடியரசு தினம் முடிந்த 3-வது நாளில் பாசறை திரும்புவது வழக்கமாகும். இதன்படி, டெல்லி விஜய் சவுக் பகுதியில் ராணுவ இசைக்குழுவினரின் இசைக்கருவிகள் முழங்க தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை வீரர்கள் பாசறைக்கு திரும்பினர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு