Image Courtesy : ANI 
தேசிய செய்திகள்

காஷ்மீரில் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டை - பதுக்கி வைக்கப்பட்ட வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு

ரஜோரி மாவட்டத்தில் இந்திய ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தனமண்டி என்ற பகுதியில் வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் இந்திய ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது, தாரா பீர் மகல் என்ற பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கையெறி குண்டுகள், ஐ.இ.டி. எனப்படும் நவீன கருவிகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை