தேசிய செய்திகள்

மனைவியின் வளைகாப்புக்கு சென்றபோது விபத்தில் ராணுவ வீரர் சாவு

பெலகாவியில் மனைவியின் வளைகாப்புக்கு சென்றபோது விபத்தில் சிக்கி ராணுவ வீரர் உயிரிழந்தார்.

தினத்தந்தி

பெலகாவி:

பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா கொசூரு கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் சங்கொள்ளி (வயது 29). இவர், ராணுவ வீரர் ஆவார். பெலகாவியில் உள்ள ராணுவ மையத்தில் பிரகாஷ் தற்போது பணியாற்றி வந்தார். பிரகாசுக்கு திருமணமாகி விட்டது. அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். பிரகாசின் மனைவிக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) வளைகாப்பு நடைபெற உள்ளது.

மனைவியின் வளைகாப்பில் கலந்து கொள்ள சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் அவர் புறப்பட்டு சென்றார். பெலகாவி சுவர்ணசவுதா அருகே தேசிய நெடுஞ்சாலையில் வரும் போது பிரகாசின் மோட்டார் சைக்கிள் மீது ஒரு வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் உயிர் இழந்தார். 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு