தேசிய செய்திகள்

23 பேரை பலி கொண்ட ரெயில் நிலையத்தில் புதிய நடைமேம்பாலம் கட்ட ராணுவம் உதவி செய்யும்: பட்னாவிஸ்

மும்பையில் 23 பேரை பலி கொண்ட எல்பின்ஸ்டோன் சாலை ரெயில் நிலையத்தில் புதிய நடைமேம்பாலம் கட்ட ராணுவம் உதவி செய்யும் என முதல் மந்திரி பட்னாவிஸ் கூறியுள்ளார்.

இந்த நிலையில், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் ரெயில் நிலையத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

அவர்களுடன் மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசும் உடன் சென்றார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மும்பையில் உள்ள எல்பின்ஸ்டோன் சாலை ரெயில் நிலையம் மற்றும் 2 புறநகர் ரெயில் நிலையங்களில் புதிய நடைமேம்பாலங்கள் கட்டுவதற்கு ராணுவத்தின் உதவியை கோரியுள்ளோம்.

வருகிற ஜனவரி 31ந்தேதிக்குள் இவை கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்