தேசிய செய்திகள்

சொத்து பிரச்சினை அண்ணனை தாக்கி கொன்ற வியாபாரி கைது

பண்ட்வால் அருகே சொத்து பிரச்சினை அண்ணனை தாக்கி கொன்ற வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

மங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா விட்டலா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பட்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன் பங்கேரா(வயது 49). வியாபாரியான இவரது சகோதரர் கணேஷ் பங்கேரா(51). இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் சொத்து தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பத்மநாபன், கணேசை தாக்கினார். அதில் பலத்த காயம் அடைந்த கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து விட்டலா போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்மநாபனை கைது செய்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்