தேசிய செய்திகள்

ஓவைசி கட்சியுடன் கூட்டணி கிடையாது - சிவசேனா

ஓவைசி கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

எம்.ஐ.எம். கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, " நாங்கள் அந்த கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. ஏனெனில் அவுரங்கசீப் முன் குனியும் எந்த நபருடனும் நாங்கள் கைகோர்க்க மாட்டோம். சத்ரபதி சிவாஜி, சம்பாஜி மகாராஜை பின்தொடரும் எவரும் அந்த கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டார்கள். " என்றார்.

பா.ஜனதாவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் சேர வேண்டும் என கூறப்பட்டு வருவது குறித்து முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், " பா.ஜனதாவை தோற்கடிக்க அனைத்துகட்சிகளும் சேருகின்றன. அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. அவர்கள் ஒன்றாகட்டும், நாட்டு மக்கள் மோடியை விரும்புகின்றனர். மக்கள் அவருக்கு வாக்களிப்பார்கள். " என்றார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு