தேசிய செய்திகள்

அசாமில் ரூ.4 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

அசாமில் ரூ.4 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கவுகாத்தி,

நாகாலாந்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக சிறப்பு அதிரடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் ஜோராபத் அருகே அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த ஒரு லாரியை மடக்கி பிடித்து அதில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 537.2 கிராம் ஹெராயின் அடங்கிய 45 சோப்புப் பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் இந்த ஹெராயின் போதைப்பொருளின் மதிப்பு ரூ. 4 கோடிக்கு மேல் இருக்கும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் லாரியை ஓட்டி வந்த போதைப்பொருள் சப்ளையரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு