தேசிய செய்திகள்

சட்டசபை தேர்தல்: ஜார்கண்ட் மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது

சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

தினத்தந்தி

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தில் ரகுபர் தாஸ் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. 81 உறுப்பினர்களை கொண்ட அந்த மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல், 13 தொகுதிகளில் 30-ந்தேதி நடக்கிறது. அந்த தொகுதிகளில் நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

வேட்புமனு தாக்கலுக்கு 13-ந்தேதி கடைசிநாள் ஆகும். மனுக்களை வாபஸ் பெற 16-ந்தேதி கடைசி நாள். 30-ந்தேதி, காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை ஓட்டுப்பதிவு நடைபெறும். டிசம்பர் 23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது