கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

75 லட்சம் பேர் பங்கேற்கும் சூரிய நமஸ்காரம்: மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு

பொங்கல் திருநாளில் 75 லட்சம் பேர் பங்கேற்கும் சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சிக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பொங்கல் மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, வருகிற 14-ந் தேதி, உலகளாவிய பிரமாண்டமான சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சிக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் 75 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்.

இதுகுறித்து ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்லா உயிர்களையும் காக்கும் சூரிய கதிர்களுக்கு நன்றி சொல்லும்விதமாக சூரிய நமஸ்காரம் நடத்தப்படுகிறது. மேலும், சூரிய நமஸ்காரம், நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கக்கூடியது. சூரிய ஒளி படுவதால் நமக்கு விட்டமின் டி கிடைக்கிறது. மேலும், பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதலுக்கு எதிரான விழிப்புணர்வுக்காகவும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சூரிய மின்சாரத்தை பயன்படுத்துவதன் மூலம், கார்பன் உமிழ்தலை குறைத்து புவி வெப்பமயமாவதை தவிர்க்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை