தேசிய செய்திகள்

டெல்லியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிப்பு

டெல்லியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில், மும்பை, கர்நாடக, ஒடிசா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் டெல்லியிலும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்,

டிசம்பர்31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அந்த நேரங்களில், பொது இடங்களில் கூடி புத்தாண்டை கொண்டாட, வாழ்த்து தெரிவிக்க, கூட்டமாக கூடக்கூடாது. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை