கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

விளைநிலங்களுக்குள் கரடி புகுந்து தாக்குதல் - 2 பண்ணை தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் அருகே விளைநிலங்களுக்குள் கரடி புகுந்து தாக்கியதில் இரண்டு பண்ணை தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

ஸ்ரீகாக்குளம்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் அருகே வஜ்ரப்பகொட்டூர் பகுதியில் விளைநிலத்திற்குள் கரடிகள் புகுந்துள்ளன. அப்போது, அங்கு பணியில் இருந்த பண்ணை தொழிலாளர்களை கரடிகள் தாக்கி கடித்து குதறியுள்ளன. இதில், படுகாயமடைந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பெண்கள் கரடி தாக்கியதால் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சென்ற மற்ற விவசாயிகள், கரடிகளை விரட்டினர். பின்னர், படுகாயமடைந்த 2 பெண்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வஜ்ரப்பகோட்டூர் பகுதியில், விவசாயிகளை கரடிகள் தாக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வரும் நிலையில், வனத்துறையினர் கண்டும் காணாதது போல் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வனப்பகுதியில் இருந்து கரடிகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை