தேசிய செய்திகள்

பீகார்:பாய்லர் வெடித்து 4 பேர் பலி ; 5 பேர் காயம்

பீகார்: சமையலறையில் பாய்லர் வெடித்து 4 பேர் பலியானார்கள்; 5 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

மோதிஹரி:

பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரனில் மோதிஹரி அருகே சுகாலி பகுதியில் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் உள்ளது. இன்று அதிகாலை தொண்டு நிறுவனத்தின் சமையலறையில் தொழிலாளர்கள் பல பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு மதிய உணவு தயாரித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் சமையலறையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதம் அடைந்தது.

இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இதில் ஒருவர் மட்டும் முசாபர்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்