தேசிய செய்திகள்

பீகார் தேர்தல்: வாக்காளர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து

அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தேர்தல் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக ஞானேஷ் குமார் கூறியுள்ளார்.

தினத்தந்தி

பாட்னா,

பீகார் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டமாக நவம்பர் 6-ந்தேதி (நேற்று) 121 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு வருகிற 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், முதல் கட்ட தேர்தலில் மொத்தம் பதிவான வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, 64.66 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து வாக்களித்ததாக பீகார் மாநில வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தேர்தல் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்