தேசிய செய்திகள்

பீகார் ரெயில் நிலையத்தில் நக்சலைட்டுகள் தாக்குதல் : 2 ரெயில்வே அதிகாரிகள் கடத்தல்

பீகார் ரெயில் நிலையத்தில் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தி தீவைத்தனர் 2 ரெயில்வே அதிகாரிகள் கடத்தப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

பாட்னா

நேற்று இரவு பீகாரில் உள்ள மசூத ரயில் நிலையத்தில் நகசலலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். முதல் கட்ட தகவலின் நக்சலைட்டுகள் நேற்று இரவு தாக்குதல் நடத்தி ரெயில் நிலையத்திற்கு தீவைத்தனர். மேலும் நக்சலைட்டுகள் ரெயில்வே நிலைய உதவி மாஸ்டர் மற்றும் ஒரு ரயில் ஊழியரை கடத்திச் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஆனால் அங்கு யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

மண்டல ரயில்வே மேலாளர் மால்டாவுக்கு உதவி ஸ்டேஷ்ன் மாஸ்டர் கடத்தபட்டதாக போன் வந்து உள்ளது. மால்டா ஒரு அழைப்பு வந்தது.மசூதன் பாதையில் தொடர்ந்து ரெயில்கள் இயக்கபட்டால் கடத்தப்பட்ட இருவரையும் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தியுள்ளனர்.

இந்த பாதையில் பயணிக்கும் பயணிகள் மாற்று வழித்தடங்களை பயனபடுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.மசூதன் ரயில் நிலையத்தில் நக்சல் தாக்குதல் நடத்தியதில், மால்கா பிரிவில் கிளில்-ஜமால்பூர்-பாகல்பூர் பிரிவில் 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு