தேசிய செய்திகள்

பாலியல் புகாரில் கைதாகியுள்ள பேராயர் மூலக்கலின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

பாலியல் புகாரில் கைதாகியுள்ள பேராயர் மூலக்கலின் நீதிமன்ற காவல் அக்.20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கோட்டயம்,

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறை மாவட்ட பேராயராக இருந்தவர் பிராங்கோ மூலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார்.

இதுதொடர்பாக பிராங்கோ 3 நாள் விசாரணைக்கு பிறகு கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். பிராங்கோ தற்போது கோட்டயம் மாவட்டம் பலா கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளார்.பேராயர் மூலக்கல்லின் நீதிமன்றக்காவல் இன்றுடன் முடிந்த நிலையில், அவரது நீதிமன்ற காவலை அக்டோபர் 20 ஆம் தேதி வரை நீட்டித்து பலா முதன்மை ஜூடிசியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்