தேசிய செய்திகள்

பிட்காயின் முறைகேட்டில் மூடிமறைக்க ஒன்றும் இல்லை; மந்திரி அரக ஞானேந்திரா பதில்

பிட்காயின் முறைகேட்டில் மூடிமறைக்க ஒன்றும் இல்லை என்று மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு:

கர்நாடக மேல்-சபையில் நேற்று கேள்வி நேரத்தில் ஜனதாதளம்(எஸ்) உறுப்பினர் டி.ஏ.ஷரவணா கேட்ட கேள்விக்கு போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பதிலளிக்கையில் கூறியதாவது:-

பிட்காயின் முறைகேட்டில் பணத்தை இழந்தவர்கள் யாரும் போலீசாரிடம் புகார் அளிக்கவில்லை. இந்த பிட்காயின் விவகாரம் குறித்து இந்த சபையில் பல முறை விவாதம் நடைபெற்றது. அதற்கு நான் பதிலளித்துள்ளேன். உறுப்பினர், இதனால் யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால் அதுபற்றி விவரங்களை அளித்தால் விசாரணை நடத்தப்படும். அமெரிக்க போலீசாரும் அங்கு விசாரணை நடத்தியுள்ளனர். கர்நாடகத்தை சேர்ந்தவர்களோ அல்லது நமது நாட்டை சேர்ந்தவர்களோ அதில் ஈடுபட்டுள்ளதாக எந்த தகவலையும் அந்த போலீசார் கூறவில்லை. இந்த பிட்காயின் விவகாரத்தில் மூடிமறைக்க ஒன்றும் இல்லை.

இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்