தேசிய செய்திகள்

சமையல் கியாஸ் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்: ஐக்கிய ஜனதாதளம்

பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் சமீபகாலமாக எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பிரதிபலித்து வருகிறது.

சமையல் கியாஸ் விலை அடிக்கடி உயர்ந்து வருவதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, சமையல் கியாஸ் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். அதுபோல், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் பொறுப்பில் விட்டது சரியல்ல. மக்கள் நலனுக்காக பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தலையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.