தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர்ந்தனர்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தினத்தந்தி

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரகுபர் தாஸ் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர், நேற்று பா.ஜனதாவில் இணைந்தனர்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுக்தியோ பகத், மனோஜ் யாதவ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த குணால் சாரங்கி, ஜெயபிரகாஷ் பாய் படேல். சுயேச்சை எம்.எல்.ஏ. பானுபிரதாப் சாகி ஆகியோர் பா.ஜனதா அலுவலகத்தில் முதல்-மந்திரி ரகுபர் தாஸ் முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தனர். ஜார்க் கண்ட் மாநில முன்னாள் டி.ஜி.பி. டி.கே.பாண்டே, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சுசித்ரா சின்கா, ஆர்.பி.சின்கா ஆகியோரும் பா.ஜனதாவில் இணைந்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்