தேசிய செய்திகள்

இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷம்; பாஜக பிரமுகர் உள்பட 6 பேர் கைது

'ராம், ராம்' என முழக்கம் எழுப்புபவர்கள் இஸ்லாமியர்களை கொலை செய்து விடுவோம் எனக் கூறும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி ஜந்தர் மந்தரில் வன்முறையை தூண்டும் வகையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதற்காக பாஜக பிரமுகர் அஸ்வினி உபாத்யாய் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 'ராம், ராம்' என முழக்கம் எழுப்புபவர்கள் இஸ்லாமியர்களை கொலை செய்து விடுவோம் எனக்கூறுவதும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

போராட்டத்தை ஏற்பாடு செய்த பாஜக மூத்த தலைவர் அஸ்வினி உபாத்யாய் உள்பட குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரிடம் நேற்று இரவு வரை விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அதுபோன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என உபாத்யாய் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை