தேசிய செய்திகள்

பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்: பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு 2 மாதம் சிறை - பெங்களூரு கோர்ட்டு தீர்ப்பு

பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் தெரிவித்ததாக பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு 2 மாதம் சிறைத்தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு:

பா.ஜனதா எம்.எல்.ஏ.

கர்நாடக சட்டசபையில் பெங்களூரு சிக்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருபவர் உதய் கருடாச்சார். பா.ஜனதா கட்சியை சேர்ந்த அவர் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அவர் தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் தெரிவித்ததாகவும், தன் மீதான வழக்குகளை மூடிமறைத்ததாகவும் கூறி பெங்களூரு 42-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்ரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

2 மாதம் சிறை

அந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று இறுதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதில், தகவல்களை மூடிமறைத்த வழக்கில் உதய் கருடாச்சார் எம்.எல்.ஏ.வுக்கு 2 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தவிட்டார்.

அவருக்கு கோர்ட்டு உடனடியாக ஜாமீன் வழங்கியதை அடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய உள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை