கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

சிறப்பு கூட்டத்தொடர் நிறைவு: நாடாளுமன்ற இரு அவைகளையும் ஒத்திவைத்தார் ஜனாதிபதி

சிறப்பு கூட்டத்தொடர் நிறைவடைந்ததையடுத்து நாடாளுமன்ற இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த வாரம் நடந்தது. இதில் முக்கியமாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா மக்களவையில் 20-ந்தேதியும், மாநிலங்களவையில் 21-ந்தேதியும் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த இரு அவைகளையும் ஜனாதிபதி கடந்த 26-ந்தேதி முறைப்படி ஒத்திவைத்திருப்பதாக நாடாளுமன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின்போது, புதிய கட்டிடம் செயல்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து