தேசிய செய்திகள்

குண்டும் குழியுமான சாலையில் நின்று புகைப்படம் எடுத்த மணப்பெண் - அரசுக்கு சூசக கோரிக்கை

நிலம்பூர் அருகே சாலையை சீரமைக்க கோரி குண்டும் குழியுமான சாலையின் நின்று மணப்பெண் எடுத்து புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் நிலம்பூர் அருகே உள்ளது பூக்கோட்டு பாலம். இங்கு வசிப்பவர் ஸீஜீஷா(23). இவருக்கு இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமண மண்டபத்துக்கு இவர் காரில் சென்றபோது ரோட்டில் ஏகப்பட்ட குண்டு குழிகள் இருந்ததுள்ளது.

இதனை பார்த்த மணப்பெண் ஸீஜீஷா காரை விட்டு இறங்கி குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்காததை கண்டித்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அந்த சாலையில் நின்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பின்பு மண்டபத்திற்கு சென்று மணப்பெண் ஸீஜீஷா தாலி கட்டிக் கொண்டார்.

குண்டும் குழியுமான சாலையில் நின்று மணப்பெண் ஸீஜீஷா எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை