கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கேரளாவில் கனமழை: கவனமாக இருங்கள் - ராகுல் காந்தி எச்சரிக்கை...!

கேரளாவில் கனமழை பெய்து வருவதால் சகோதர, சகோதரிகள் கவனமாக இருங்கள் என்று ராகுல் காந்தி தனது டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கேரளத்தில் கனமழை காரணமாக திருவனந்தபுரம், இடுக்கி, எர்ணாகுளம் உள்பட மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல ஆறுகள் அபாயகரமான நிலையை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆழப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் கனமழை பெய்து வருவதால் சகோதர, சகோதரிகள் கவனமாக இருங்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், கேரளாவில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் கனமழையில் தவித்து வருகின்றனர். காங்கிரஸ் தொண்டர்கள் எல்லா வகையிலும் அவர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். கேரள சகோதர, சகோதரிகள் கவனமாக இருங்கள் மற்றும் அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் பின்பற்றுங்கள்என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து