தேசிய செய்திகள்

லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்ந்த காதலி கொடூர கொலை; கர்நாடகாவில் பயங்கரம்

கர்நாடகாவில் லிவ்-இன் முறையில் பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த காதலியை, காதலர் இன்று கொடூர கொலை செய்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் ஹொரமாவு என்ற பகுதியில் சந்தோஷ் தமி என்பவருடன் கிருஷ்ண குமாரி என்பவர் லிவ்-இன் முறையில் பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

நேபாள நாட்டை சேர்ந்தவரான கிருஷ்ண குமாரி அழகு கலை நிபுணராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கிருஷ்ண குமாரி கொடூர கொலை செய்யப்பட்டு கிடந்து உள்ளார்.

போலீசார் தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். பெங்களூரு நகரின் கிழக்கு பகுதிக்கான துணை காவல் ஆணையாளர் பீமாசங்கர் எஸ். குலெட் செய்தியாளர்களிடம் கூறும்போது, பெங்களூரு நகரின் ஹொரமாவு பகுதியில் லிவ்-இன் பார்ட்னர்களாக வாழ்ந்த சந்தோஷ் தமிக்கும், கிருஷ்ண குமாரிக்கும் இடையே இன்று வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இதில், தகராறு முற்றியதில், கிருஷ்ண குமாரியின் தலையை, தமி சுவரின் மீது மோத செய்துள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த அந்த பெண் உயிரிழந்து விட்டார் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் தமியை இன்று கைது செய்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து