கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

‘4-ஜி’ சேவை: நாடு முழுவதும் 1.12 லட்சம் ‘டவர்’களை நிறுவும் பி.எஸ்.என்.எல்...!!

‘4-ஜி’ சேவைக்காக நாடு முழுவதும் 1.12 லட்சம் ‘டவர்’களை பி.எஸ்.என்.எல். நிறுவுகிறது என மக்களவையில் மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் விரைவில் உள்நாட்டு 4-ஜி தொலை தொடர்புச்சேவை (நான்காம் தலைமுறை தொலைதொடர்புச்சேவை) பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான பணிகளில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். களம் இறங்கி உள்ளது.

இதுபற்றி நேற்று கேள்வி நேரத்தின் போது மத்திய தொலை தொடர்புத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-

4-ஜி தொலைதொடர்புச்சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வர தயாராக உள்ளது. இந்த சேவை இந்திய என்ஜினீயர்கள், விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது. இது உலகளாவிய பாராட்டை பெற்றுள்ளது.

இந்த 4-ஜி தொலைதொடர்பு சேவைக்காக பி.எஸ்.என்.எல். நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை அமைக்கிறது.

உடனடியாக 6 ஆயிரம் டவர்களுக்கு ஆர்டர் கொடுக்கும் பணியில் பி.எஸ்.என்.எல். ஈடுபட்டுள்ளது. அடுத்து 6 ஆயிரம் டவர்களுக்கும், இறுதியில் 1 லட்சம் டவர்களும் அமைக்கப்படும்.

5-ஜி தொலைதொடர்பு தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணி மற்றொரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அது அடுத்த சில மாதங்களில் தயாராகி விடும்.

ரெயில்களில் 4-ஜி இணையதள சேவை பற்றி கேட்கிறீர்கள். ரெயில் வேகம் 100 கி.மீ.வுக்கு அதிகமாக இருந்தால் 5-ஜி நெட்வொர்க் தேவை. 4-ஜி நெட்வொர்க்கில் இடையூறுகள் ஏற்படும். இது தொழில்நுட்ப மதிப்பீட்டின் காலம் ஆகும். 5-ஜி தயாராகி வருவதால், அது விரைவில் கிடைத்து விடும் என்று அவர் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்