புதுடெல்லி,
கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ பிப்ரவரி 17-ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். டெல்லிக்கு வரும் ஜஸ்டின் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு, பொருளாதாரக்கொள்கை, கல்வி மற்றும் தொழில் வளர்சி உள்ளிட்ட பலவற்றை குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதனை தொடர்ந்து பிப். 17 முதல் 23 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இவ்வாறு மத்திய வெளியுறத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.