தேசிய செய்திகள்

கண்ட்லா-தூத்துக்குடி இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து - மத்திய மந்திரிகள் தொடங்கி வைத்தனர்

கண்ட்லா-தூத்துக்குடி இடையே சரக்கு கப்பல் போக்குவரத்தினை மத்திய மந்திரிகள் தொடங்கி வைத்தனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாட்டில் ஒரு இடத்தில் இருந்து தொலைதூரத்தில் உள்ள மற்றொரு இடத்துக்கு சரக்கு பெட்டகங்கள் (கன்டெய்னர்) ரெயில்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் அதிக செலவு ஆவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதை கட்டுப்படுத்த நாட்டில் முதல் முறையாக உள்நாட்டு சரக்கு பெட்டக கப்பல் போக்குவரத்து சேவை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை டெல்லியில் நேற்று மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சகத்தில் இருந்து அந்த துறையின் மந்திரி நிதின் கட்காரி மற்றும் ரெயில்வே, நிலக்கரித்துறை மந்திரி பியூஷ்கோயல் ஆகியோர் காணொலி காட்சி மூலம் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

இருமார்க்கமாக வாரம் ஒருமுறை இயக்கப்படும் இந்த கப்பல்களில் ஒரே நேரத்தில் 700 சரக்கு பெட்டகங்கள் எடுத்துச் செல்லப்படும் என்றும், மங்களூரு, கொச்சி துறைமுகங்கள் வழியாக இந்த கப்பல் பயணிக்கும் என்றும் மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை