தேசிய செய்திகள்

வங்கிகள் இணைப்புக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

வங்கிகள் இணைப்புக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பரோடா வங்கியுடன் விஜயா, தேனா வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அரசு கொள்கை அளவில் முடிவு எடுத்தது. இதற்கு பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. 3 வங்கிகள் இணைப்பு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நீதிபதிகள் நாரிமன், வினீத் சரண் ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வங்கி ஊழியர் சங்கங்கள் தரப்பில், 3 வங்கிகளை இணைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்ததுடன், அந்த மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு