தேசிய செய்திகள்

பண மதிப்பு இழப்பு நடவடிக்கை ஊழல்வாதிகளுக்கு எதிரானது - நிதி ஆயோக் துணை தலைவர் தகவல்

பண மதிப்பு இழப்பு நடவடிக்கை ஊழல்வாதிகளுக்கு எதிரானது என நிதி ஆயோக் துணை தலைவர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமார் ஒரு விழாவில் பேசியதாவது:-

முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் மோடி-ஜெட்லியின் பொருளாதார சவால்கள் என்ற புத்தகத்தை வெளியிட உள்ளார். அதில் பண மதிப்பு இழப்பு பெரியது, கடுமையானது, பண அதிர்ச்சி, பொருளாதார சரிவுக்கு துரிதப்படுத்துவது. இது பெரிய மனிதர்களுக்கு எதிரானது என்று அவர் எழுதியுள்ளதாக அறிகிறேன். அவர் ஏன் இந்த வார்த்தையை குறிப்பிட்டார் என தெரியவில்லை.

பண மதிப்பு இழப்பு நடவடிக்கை ஊழல்வாதிகளுக்கு, முறையற்ற வகையில் சொத்துகளை குவித்துள்ளவர்களுக்கு எதிரானது. பெரிய மனிதர்கள் என்பது நேர்மையானவர்கள், கடின உழைப்பாளிகள், சட்டத்தை மதிப்பவர்கள் என நான் நம்புகிறேன். எனவே இது அவர்களுக்கு எதிரானது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்