தேசிய செய்திகள்

சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

சிக்கமகளூரு:

சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகா மகலி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் காசு வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 8 பேர் காசு வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களில் 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மற்ற 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். கைதானவர்கள் மகலி கிராமத்தை சேர்ந்த நாகராஜ், மஞ்சப்பா, மது, முரளப்பா என்று தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.12 ஆயிரம் ரொக்கம், 4 மோட்டார் சைக்கிள்கள், ஒரு செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அஜ்ஜாம்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து