தேசிய செய்திகள்

ரெயில் நிலையங்களில் அரசியல் விளம்பரத்தை அகற்ற ரெயில்வே வாரியம் உத்தரவு

ரெயில் நிலையங்களில் அரசியல் விளம்பரத்தை அகற்ற வேண்டும் என ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ரெயில் டிக்கெட்கள் மற்றும் தேநீர் கோப்பைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம், அரசின் சாதனைகள், பிரசார வாசகங்கள் இடம்பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ரெயில்வேக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்தது. இந்நிலையில் ரெயில் நிலையங்கள் மற்றும் டிக்கெட்டில் அரசியல் விளம்பரங்களை அகற்ற வேண்டும் என்று ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

ரெயில் டிக்கெட், ரெயில் பெட்டிகள், ரெயில் நிலையங்கள் மற்றும் வளாகங்களில் எந்த அரசியல் தலைவரின் புகைப்படமோ, அரசியல் விளம்பரமோ இருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.

விளம்பர நிறுவனங்களுக்கும் உரிய முறையில் இதை தெரியப்படுத்த வேண்டும் என கோட்ட ரெயில்வே மேலாளர்களுக்கு ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்