தேசிய செய்திகள்

ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக ரெயில்வே அதிகாரி கைது

அசாமில் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற முயன்ற ரெயில்வே அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கவுகாத்தி,

ரயில்வே ஒப்பந்தங்களை சாதகமாக வழங்குவதற்காக ரூ.1 கோடி லஞ்சம் வாங்கிய, ரயில்வே பொறியாளர் சேவை பிரிவு(ஐஆர்இஎஸ்) அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

அசாம் மாநிலம் மலிகோவானில் உள்ள வடகிழக்கு முன்னணி ரயில்வேயில், பணிபுரிபவர் மகேந்தர் சிங் சவுகான். இவர், 1985ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த ஐஆர்இஎஸ்(IRES) அதிகாரி ஆவார்.

இவர், ரயில்வே ஒப்பந்தத்தை, தனியாருக்கு வழங்குவதில் சாதகமாக நடந்து கொள்வதற்காக ரூ.1 கோடி லஞ்சம் பெற முயன்ற போது, சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இவ்விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் 22 இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்