தேசிய செய்திகள்

சி.பி.ஐ. இயக்குனரை நியமிக்கக்கோரிய மனு: மத்திய அரசு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த ரிட் மனுவில், ‘சி.பி.ஐ. இயக்குனராக இருந்த ஆர்.கே.சுக்லா பதவிக்காலம் நிறைவடைந்ததையொட்டி, பிரவீண் சின்ஹா இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சி.பி.ஐ. இயக்குனர் நியமனத்தை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கொண்ட நியமனக்குழு சட்டப்படி செய்ய வேண்டும். சி.பி.ஐ. இயக்குனர் ஓய்வுபெறும் முன்னரே அடுத்த இயக்குனர் தேர்வு எதிர்காலத்தில் நடைபெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு அவர்கள் உத்தரவிட்டனர்.