லக்னோ,
உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று பரிந்துரை செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ஹத்ராசில் நடந்த துரதிருஷ்ட சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்குவதற்காகவும், சி.பி.ஐ. மூலம் ஒரு விசாரணை நடத்த உத்தரபிரதேச அரசு பரிந்துரைக்கிறது. இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று குறிப்பிட்டு உள்ளார்.
ஆனால் இந்த அறிவிப்பை இளம்பெண்ணின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையின் கீழ் நடைபெறும் விசாரணையே தேவை என அவர்கள் கூறியுள்ளனர்.