தேசிய செய்திகள்

சி.பி.எஸ்.இ. வாரிய தேர்வு தேதி வரும் டிசம்பர் 31ந்தேதி அறிவிக்கப்படும்: மத்திய கல்வி மந்திரி

சி.பி.எஸ்.இ. வாரிய தேர்வுகள் நடைபெறும் தேதி வருகிற டிசம்பர் 31ந்தேதி அன்று அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வி மந்திரி தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

சி.பி.எஸ்.இ. வாரிய தேர்வுகள் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெறும்.  இதற்கான தேர்வு கால அட்டவணை நவம்பரில் வெளியிடப்படும்.  ஆனால், கொரோனா பாதிப்புகளால் இந்த அறிவிப்பு வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டது.

எனினும், பிப்ரவரி வரை தேர்வு நடைபெறாது என மத்திய கல்வி மந்திரி அறிவிப்பு வெளியிட்டார்.  இந்நிலையில், 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளை சேர்ந்த மாணவ மாணவியர் பலர் தேர்வு கால அட்டவணையை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து, இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி பற்றி வருகிற டிசம்பர் 31ந்தேதி அன்று மாலை 6 மணியளவில் மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிசாங்க் அறிவிப்பு வெளியிடுவார் என்று மத்திய கல்வி அமைச்சகம் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளது.

இதற்காக @DrRPNishank என்ற டுவிட்டரை கவனமுடன் பின்தொடரும்படியும் மாணவ மாணவியரை அமைச்சகம் தனது டுவிட்டரில் கேட்டு கொண்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது