கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கொரோனாவால் பெற்றோரை இழந்த 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது: சி.பி.எஸ்.இ.

கொரோனாவால் பெற்றோரை இழந்த 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனாவால் பெற்றோரை இழந்த, அடுத்த ஆண்டு (2021-22) 10, 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு பதிவு கட்டணம், தேர்வு கட்டணம் கிடையாது என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

தத்து பெற்றோர், சட்டப்பூர்வ காப்பாளர் ஆகியோரை கொரோனா தொற்றால் இழந்த மாணவ, மாணவியருக்கும் இது பொருந்தும். அடுத்த ஆண்டு 10, 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் பட்டியலை பள்ளிகள் சமர்ப்பிக்கும்போது, பெற்றோரை இழந்த மாணவர்கள் குறித்த விவரங்களை சரிபார்த்து வழங்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யாம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது