தேசிய செய்திகள்

50 சதவிகிதம் ஊழியர்கள் பணிக்கு வந்தால் போதும்! -மத்திய அரசு

50 சதவிகிதம் ஊழியர்கள் பணிக்கு வந்தால் போதும் என மத்திய அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 170 ஐ தாண்டி உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தகவல் படி, மார்ச் 18 ந்தேதி வரை , 166 நாடுகளில் 207,860 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்புகளும் 8,657 இறப்புகளும் பதிவாகி உள்ளன.

மத்திய அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்து வேலை செய்யவும், மீதமுள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு வரவும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

குழு பி மற்றும் சி ஊழியர்களில் 50 சதவீதம் பேர் ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு வர வேண்டும். மீதமுள்ள 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட வேண்டும் என்பதை துறைத் தலைவர்கள் உறுதிப்படுத்தலாம் என்று பணியாளர் அமைச்சகத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட நாளில் அலுவலகத்திற்கு வரும் அனைத்து ஊழியர்களுக்கும் வேலை நேரத்தை மாற்றி கொள்ள வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்