தேசிய செய்திகள்

ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு: மத்திய நிதியமைச்சகம்

அடுத்த 6 மாதங்களில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.

தினத்தந்தி

மொத்த கடன்ரூ.12.05 லட்சம் கோடி

நடப்பு நிதியாண்டில் ரூ.12.05 லட்சம் கோடி மொத்த கடன் வாங்க வேண்டியிருக்கும் என 2021-22-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டு இருந்தது. இதில் ரூ.7.02 லட்சம் கோடி (60 சதவீதம்) நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் திட்டமிடப்பட்டது.அதன்படி பத்திரங்கள் வெளியீடு மூலம் நிதியாண்டின் முதல் பாதியில் ரூ.7.02 லட்சம் கோடி பெறப்பட்டது. எனினும் நிகர கடன் 9.37 லட்சம் கோடியாக இருந்தது.எனவே 2-வது பாதியில் மீதமுள்ள ரூ.5.03 லட்சம் கோடி கடன் வாங்க இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

பொருளாதாரம் பாதிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான வருவாய் இடைவெளியை போக்குவதற்காக நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் அரசாங்கம் ரூ.5.03 லட்சம் கோடி கடன் வாங்கப்படுவதாக அமைச்சகம் கூறியுள்ளது. இதைப்போல மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி இழப்பீட்டுக்கான நிதியை வெளியிடுவதற்கான காரணிகளும் இதில் அடங்கும் என நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மொத்த கடனில், முந்தைய கடன்களை திருப்பிச் செலுத்துவதும் அடங்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு