தேசிய செய்திகள்

ராஜஸ்தான் முதல்-மந்திரிக்கு நெஞ்சு வலி; ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொள்ள முடிவு

ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு ஏற்பட்ட நெஞ்சு வலியை அடுத்து ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்து கொள்ள உள்ளார்.

தினத்தந்தி

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவர் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ். மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்து கொள்ள உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்த பின்பு சுகாதார பாதிப்புகள் எனக்கு ஏற்பட்டன. நேற்றிலிருந்து கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது.

இதனால், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்து கொள்ள உள்ளேன். எஸ்.எம்.எஸ். மருத்துவமனையிலேயே சிகிச்சை செய்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் நலமுடனேயே உள்ளேன். விரைவில் மீண்டும் வருவேன். உங்களுடைய ஆசிகளும், வாழ்த்துகளும் என்னுடன் உள்ளன என தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை