தேசிய செய்திகள்

நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனாவில் இருந்து மீண்டார்

சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்பட்டநிலையில், நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனாவில் இருந்து மீண்டார்.

மும்பை,

மும்பையை சேர்ந்த நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கடந்த 2015-ம் ஆண்டு இந்தோனேசியா நாட்டில் சிக்கினார். இவர் மீது கொலை, கொள்ளை, கடத்தல் உள்பட 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் நாடு கடத்தி வரப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

61 வயதான அவருக்கு கடந்த மாதம் 22-ந் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து 24-ந் தேதி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கடந்த வெள்ளிக்கிழமை பரபரப்பு தகவல் வெளியானது. ஆனால் இதை திகார் சிறை நிர்வாகம் மறுத்தது.

இந்தநிலையில் சோட்டா ராஜன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளார். எனவே அவர் நேற்று திகார் சிறைக்கு திரும்பியதாக சிறைத்துறை தெரிவித்து உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு