புதுடெல்லி
சீன கோடீஸ்வரரும், பெலிமோத் அலிபாபா குரூப் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் நிறுவனருமான ஜாக் மா . சீன அரசுடனான மோதலில் கடந்த 2 மாதங்களாக காணவில்லை என கூறப்படுகிறது. கோடீசுவரர் ஜாக் மாவின் நிறுவனங்களின் மீதான ஒடுக்குமுறையை சீனா தீவிரப்படுத்தியதால், அவரை காணவில்லை என்ற ஊகங்கள் பரவலாக எழுந்து உள்ளன.
ஜாக் மா கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பொது வெளியில் தோன்றவில்லை என்று கூறப்படுகிறது.
நவம்பர் மாதத்தில் இருந்து அவர் வெளியில் தோன்றவில்லை. அரசாங்கத்தால் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சீன அரசை தாக்கி பேசியதில் இருந்து அலிபாபா மற்றும் அதன் நிறுவனங்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் சீனாவின் உயர் அதிகாரிகள் இறங்கினர். சீன அதிகாரிகள் அண்ட் குழுவின் 37 பில்லியன் டாலர் ஆரம்ப பொது சலுகையை (ஐபிஓ) நிறுத்தி வைத்தனர்
ஷாங்காயில் நடந்த நிதி உச்சி மாநாட்டில் ஒரு உரையில் ஜாக் மா சீனாவின் நிதி மற்றும் ஒழுங்குமுறை அமைப்பு புதுமைகளைத் தடுப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மேலும் சிறிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு நிதி சேவைகளை விரிவுபடுத்துவதற்காக அவர் மறுசீரமைக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.
இதையடுத்து சீன அதிகாரிகள் அண்ட் குழுவின் 37 பில்லியன் டாலர் ஆரம்ப பொது சலுகையை (ஐபிஓ) நிறுத்தி வைத்தனர்
அலிபாபா மற்றும் நிறுவனங்கள் மீது நம்பிக்கையற்ற விசாரணையை சீனா அறிவித்து.கடந்த சில ஆண்டுகளாக அந்த நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடுகள், ஒப்பந்தங்களுக்குப் பின்னால் உள்ளவை குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.