Image Courtacy: PTI 
தேசிய செய்திகள்

ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் விசாரணை

ராஜமுந்திரி சிறையில் சந்திரபாபு நாயுடுவிடம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

தினத்தந்தி

விஜயவாடா,

ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் விஜயவாடா நீதிமன்றம் சி.ஐ.டி. போலீசார் சந்திரபாபு நாயுடுவை காவலில் வைத்து மேல் விசாரணை நடத்த 2 நாட்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இரண்டு நாளும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து 9 சி.ஐ.டி. அதிகாரிகள் கொண்ட குழு நேற்று ராஜமுந்திரி மத்திய சிறையில் சந்திரபாபு நாயுடுவிடம் விசாரணையை தொடங்கியது. விசாரணை முழுவதும் வீடியோவாக எடுக்கப்படுகிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு