தேசிய செய்திகள்

ராமநவமி பேரணியில் வெடித்த மோதல்.. வாகனங்களுக்கு தீ வைத்ததால் பதற்றம்.. - மம்தா மீது பாஜக கடும் தாக்கு

போலீஸ் பாதுகாப்பில் கவனம் செலுத்த தவறியதே இந்த வன்முறைக்கு காரணம் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

கொல்கத்தா,

ஹவுராவில் ராம் நவமி பேரணி நடைபெற்ற போது திடீரென சில கற்களை வீசி தாக்க தொடங்கினர். இதையடுத்து, வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் அங்கு பதற்றம் அதிகரித்தது.

இந்நிலையில், ஹவுராவின் அமைதியை சீர்குலைக்கு வகையில் வெளியில் இருந்து ஆட்கள் வரவழைத்து வன்முறை தூண்டப்பட்டிருப்பதாக மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால் பாஜகவிற்கு எதிரான தர்ணா போராட்டத்தில் கவனம் செலுத்தில், போலீஸ் பாதுகாப்பில் கவனம் செலுத்த மம்தா பானர்ஜி கவனம் செலுத்த தவறியதே இந்த வன்முறைக்கு காரணம். இதற்கு முழுக்க முழுக்க மம்தா பானர்ஜி தான் பொறுப்பு என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

SCROLL FOR NEXT