முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டம் தர்மடம் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார். அவர் காலை 11 மணியளவில் கண்ணூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட துணை வளர்ச்சி ஆணையர் பெவின் ஜான் வர்கீசிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொதுமக்களிடம் இருந்து கிடைத்து வரும் பேராதரவின் பின்பலத்தோடு இடதுசாரி முன்னணி தேர்தல் களத்தை சந்திக்கிறது. பொதுமக்களின் நன்மைக்காக கடந்த 5 ஆண்டுகள் செயல்படுத்தி வந்த அதே வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் உத்வேகத்துடன் முன்னோக்கி கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.