தேசிய செய்திகள்

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்புள்ள கோகைன் பறிமுதல்

போதைப் பொருள் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப் பொருளை கைப்பற்றியுள்ளனர்.

தினத்தந்தி

சென்னை

நேற்று இரவு மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தென் அமெரிக்க கண்டத்தில் செயல்படும் போதைப்பொருள் கும்பகலுக்கு பணிபுரிபவராகவும் அடையாளம் கண்டுள்ளனர் அதிகாரிகள்.

விஷால் (27) எனும் இளைஞர் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர்; காவல் துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து டெல்லி செல்லும் ரயிலில் ஏறவிருந்த அவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விஷாலின் முதுகுப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 10 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

விஷாலுக்கு ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் போதைப்பொருளை கையளித்ததாக கூறப்படுகிறது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக மண்டல போதைப் பொருள் கண்காணிப்புத்துறைத் தலைவர் புரூனோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்